வள்ளலாரின் பொன் மொழிகள்
![வள்ளலாரின் பொன் மொழிகள்](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2024/01/fda98a78-b634-436b-8c11-084b742ccf77.jpg?resize=730%2C560&ssl=1)
வள்ளலாரின் பொன் மொழிகள்
♻️. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
♻️. பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
♻️. வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.