நதிநீர் இணைப்பு சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் உத்தரவு..!| சதீஸ்

 நதிநீர் இணைப்பு சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் உத்தரவு..!| சதீஸ்

தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் விடாமல் கொட்டி வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கூடங்குளம்- திருச்செந்தூர் சாலையிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், தாமிரபரணி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அதனை தொடர்ந்து, தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...