மாயா.. மாயா.. எல்லாம் சாயா என பிக்பாஸ் வீட்டில் அராத்தாக வாயாடும் மாயா…! | தனுஜா ஜெயராமன்

மாயா பேசுவதை கேட்பதென்பது காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தனது பெர்பாமென்ஸை நிரூபிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு எது எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை.  ஆளாளுக்கு அதாவது அவரவர்கள் தங்களது  பெர்பாமென்ஸை கொண்டுவர ஏதோ ஒன்றை பண்ணுகிறார்கள். அது எல்லாமே ரசிகர்களை கவர்கிறதா? என்பது சந்தேகம்தான்.

ஜோவிகாவை பற்றி பிரதீப், கூல் சுரேஷிடம் பேசும்போது, ஜோவிகாவுக்கு யாரை எங்கே தட்டினா மாட்டுவாங்கன்னு தெரியும். அது பக்காவா விளையாடிட்டு இருக்கு, ஃஸோ… நானே அதுகிட்ட கொஞ்சம் அடங்கிதான் போயிட்டு இருக்கேன். பரவாயில்ல ஜென்டிலா கேம் ஆட்றா… எனக்கு அவள் விளையாட்டு பிடிச்சிருக்கு என்கிறார்.

மாயா முடிந்துபோன பிரதீப் விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறி, நான் பிரதீப் அம்மாவை பற்றி ஏதும் பேசவில்லை என பிதற்றி வருகிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் இந்த வீட்டை விட்டு செல்கிறேன் என்று கூறி கொண்டே இருக்கிறார். சம்பந்தப்பட்ட விஜய் பூர்ணிமா வாயை மூடி பேச மாயா தைய்யா தக்கா என குதித்து வருகிறார்.

இன்று சனிக்கிழமை பஞ்சாயத்து நாள். கமல் இந்த விஷயம் குறித்து மறுபடியும் பேசுவாறா தெரியவில்லை. அப்படி இல்லையென்றாலும் நாமே உள்ள போய் மாயாவின் பெட்டி படுக்கையை எடுத்து கொடுத்து போயிட்டு வாம்மா என்று சொல்லலாம் போலிருக்கிறது.

தனது அம்மாவை மாயா தவறாக பேசியது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு அவங்க கூட ஒட்டவில்லை என புலம்பி வருகிறார் ப்ரதீப்.

அப்படி ஆண்டவரே அதிர்ச்சியாகும் அளவுக்கு விஜய் மாயா பூர்ணிமா என்ன தான் சொன்னார்கள் என ப்ரதீப்பை போலவே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.

இந்த வார இறுதியில் எவிக்‌ஷன் இல்லை என்கிற குறை தெரியாமல் அடித்து ஆட முயல்வார் கமல் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!