அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்

 அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்

மூன்றே நாளில் முடி காடு போல வளர கிடுகிடுவென வளர இந்த அதிசய பேக்கை ட்ரை பண்ணுங்க. அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்!!

இயற்கையிலேயே பெண்கள் அழகானவர்கள் தான். அதிலும் நீளமான கூந்தல் உடைய பெண்களின் அழகு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். அப்படி அழகை அதிகரித்து தரக் கூடிய இந்த முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என நினைப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முடி இப்படி நீளமாகவும் அடர்த்தியாக வளர நாம் கொஞ்சம் மெனக்கெட தான் வேண்டும். இன்றைய அவசர காலகட்டத்தில் இதையெல்லாம் பொறுமையாக செய்வதற்கு யாருக்கும் நேரமில்லை. ஆகையால் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு சீக்கிரத்தில் முடி வளரக் கூடிய ஒரு அருமையான ஹேர்பேக் எப்படி தயார் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அசுர வேகத்தில் முடி வளர ஹேர் பேக்
இந்த பேக்கை தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் டீ டிகாஷன், அவுரி பொடி, வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி. இந்த அவுரி பொடி, கரிசலாங்கண்ணி பொடியும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பவுலில் முதலில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு டீ டிகாஷன் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் அவுரி பொடியை கலந்து ஒரு பேக் போல தயாரித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றவாறு கூட, குறைய சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல் மற்றொரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏற்கனவே கலந்து வைத்த அவுரி பொடி கலவையுடன் இந்த முட்டை கரிசலாங்கண்ணி பொடியையும் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். தண்ணிர் தேவைப்பட்டால் கொஞ்சமாக டீ டிகாஷன் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேக்கை முதலில் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விட்டு, அதன் பிறகு தலை முழுவதும் பேக் போல போட்டு அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலை முடியை அலசி விடுங்கள் போதும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர புதிய முடிகள் முளைக்க தொடங்கி விடும். வெள்ளை முடிகள் இருந்தாலும் அதுவும் கருமையாக மாறி விடும். முடி உதிர்வும் சுத்தமாக நின்று விடும்.

இயற்கையான முறையில் முடி வளர்ச்சி பெற்று முடி உதிர்வு இல்லாமல் இளநரை போன்ற தொந்தரவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நல்ல பலனை பெற முடியும். முட்டையின் வெள்ளை கரு முடி வளர்ச்சி அதிகமாக தூண்டும். அதுமட்டுமின்றி முடியை மெண்மையாகவும் மாற்றும். அவுரி பொடி, டீத்தூள் முடியை கருமையாக மாற்றவும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். இத்துடன் கரிசலாங்கண்ணி பவுடரும் முடியை கருமையாகி இளநரையை தடுத்து முடி அதிகம் வளர உதவி செய்யும்.

இப்படி முடி வளர்ச்சிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்து மிகப் பொருள்களையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கும் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்களுடைய முடியின் வளர்ச்சி நீங்களே வியக்கும் அளவிற்கு இருக்கும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நிச்சயமாக நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...