பெண்கள் மட்டுமே தங்கும் விடுதி கேரளாவில் திறப்பு

 பெண்கள் மட்டுமே தங்கும் விடுதி கேரளாவில் திறப்பு

கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.

பெண் பயணிகளுக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதே முதல் முன்னுரிமை. இரவில் தங்கினாலும் அல்லது சில நாட்கள் இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், தனியாகப் பயணிக்க அந்தப் பாதுகாப்பு உணர்வு தேவை.

கடவுளின் சொந்த நாடு என்றும் அழைக்கப்படும் கேரளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலுமிருந்து 365 நாட்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மாநிலம் காண்கிறது. அனைத்து வகையான சுற்றுலாப் பயணிகளுக்கும் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இருக்கும் நிலையில், பெண் பயணிகளையும் கேரளா கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பயணிக்கும் பெண் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மாநில அரசு தனது முதல் “ஷி லாட்ஜை” அமைச்சர் ஏ.சி.மொய்தீன் திறந்து வைத்தார். மத்திய கேரளாவில் உள்ள திருச்சூர் நகருக்கு வெளியே 6 கிமீ தொலைவில் இந்த லாட்ஜ் அமைந்துள்ளது. இது அய்யந்தோல் பாஞ்சாலிகள் கழகத்தின் முயற்சியாகும்.

கேரள மாநிலம் கொச்சியில், 10 ரூபாய்க்கு உணவு அளிக்கும், ‘சம்ரிதி’ திட்டத்தை மாநகராட்சி சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து, பெண்களுக்கான பிரத்யேகத் தங்கும் விடுதி (12.10.2022) திறக்கப்பட்டது. ‘அவள் விடுதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தங்கும் விடுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் பெண்கள் தங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.  

‘டார்மெட்டரி’ எனப்படும் பலர் தங்கக்கூடிய படுக்கை வசதியுள்ள கூடம் மற்றும் தனி அறைகள் உள்ளன.

கொச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான, ‘பரமாரா லாட்ஜ்’ என்ற விடுதியை ‘அவள் விடுதி’யாக மாநகராட்சி மாற்றி வடிவமைத்துள்ளது. இத்திட்டத்திற்கு 4.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. டார்மெட்டரியில் தங்குவதற்கு, நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவுடன் சேர்த்து 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மேலும் சலுகை அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதியை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நேற்று திறந்து வைத்தார்.

அந்தத் தங்கும் விடுதியில் மூன்று மாடிகள் உயரம், தங்குமிடங்கள், சுயாதீன படுக்கையறைகள், ஒரு உணவுக் கூடம் மற்றும் வாசிப்பு அறைகள் உள்ளன. கேரளாவில் உள்ள 2.77 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்களின் வலையமைப்பான குடும்பஸ்ரீயால் அவை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.

பெண்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் வழங்கப்படும் என்றும், ஆனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் தாயுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பெண்களால் இயக்கப்படும் ஷீ டாக்சிகள் பிக் அண்ட் டிராப் செய்யக் கிடைக்கும்.

மாநிலத்தில் வரவிருக்கும் பெண் விடுதிகள் மற்றும் பெண்கள் டாக்சிகள் மூலம் தங்களின் அனைத்துப் பயணத் தேவைகளையும் கவனித்துக் கொள்வ தால், பெண்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தைப் பற்றிக் கவலைப் படாமல் கேரளா வழங்கும் இயற்கை அழகை அனுபவிக்க முடியும். பல மாநிலங்கள் இதைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக, தமிழ்நாடு பெண்களுக்கான தங்கும் விடுதிகளை அமைத்துத் தரவேண்டும். இது நாட்டிலுள்ள அதிகமான பெண் பயணிகளுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

ஏற்கெனவே வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தேர்வு, பணி போன்றவற்றிற்காக கேரளாவுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கும் வகையில் தங்கும் இல்லம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு கட்டணமாக ஒரு நாளுக்கு 150 முதல் 250 ரூபாய் வரையே. உணவும் நியாயமான விலைக்கு தரமாகவும் வழங்கப்படுகிறது. இதன் முதல் விடுதி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள KSRTC கட்டடத்தில் அமைக்கப்பட்டது. அதை முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் ஷைலஜா திறந்து வைத்தார்.  குழந்தைகளை உடன் அழைத்து வரும் பெண்களும் இந்தத் தங்கும் விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு வெளிமாநில பெண்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வந்தது. அதைத் தொடர்ந்துதான் இந்த ‘அவள் விடுதிகள்’ திறந்துவைக்கப்பட்டன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...