வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது? அதைத் தீர்க்கும் மருத்துவக் குறிப்புகள் என்ன?

 வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது? அதைத் தீர்க்கும் மருத்துவக் குறிப்புகள் என்ன?

வயிறு உப்புசம் சிலருக்கு வலியை உண்டாக்கும். வயிற்றில் தேங்கி இருக்கும் தேவையற்ற வாயு வயிற்றை உப்புசமாகக் காண்பிக்கும். இத னால் வயிற்றில் லேசான வலியும், ஒரு விதமான அசௌகரியமும் ஏற்ப டும்.

வயிற்றுக்கோளாறு என்பது ஒரு வலியை மட்டும் குறிப்பது இல்லை. வயிறு வலி, மேல் வயிறு, அடிவயிறு வலி, வயிற்றில் வாயு பிரியாமல் உப்புசமாகி இருப்பது என்று பல விஷயங்களையும் கொண்டிருக்கிறது. அதனால்தான் கைவைத்தியம் செய்யும்போது வலி எப்படி, எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டு அதன்படி வைத்தியம் செய்வார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

பெரும்பாலும் உடல் கோளாறுகள் அனைத்துமே கைவைத்தியத்திலேயே சரியாகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக் குமே ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டால் முதலில் வீட்டு வைத்தியம் மூலம் முதல் சிகிச்சை அளிக்கப்படும்.

எலுமிச்சைச் சாறு

ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்துவிடுங்கள். இதில் இருக்கும் அசிட்டிக் மெட்டபாலிசத்தை அதிகரிக் கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத் தைத் தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும். இதனால் வயிற்றில் வலியும் குறையும்.

வாழைப்பழம்

பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச் சினைகளை எளிதாகக் கலைகிறது. அதில் வயிற்று உப்புசத்தை விரைவாகச் சரி செய்யக் கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது. வயிறு உப்புச மான நேரத்தில் ஒன்றிரண்டு வாழைப் பழங்களைச் சாப்பிடுங்கள். பிறகு பசி எடுக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உடற்பயிற்சி

வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான சமயத்தில் மெல்லோட்டம், நடைப் பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை மேற்கொண்டால் கொஞ்ச நேரத்தில் வயிற்று உப்புசம் சரியாகிவிடும். ‘பாரத்வஜசானா’ எனும் ஆசனத்தை செய்தாலும் விரைவாக வயிறு உப்புசம் சரியாகும். இது போல வாயுவை வெளியேற்ற நிறைய ஆசனங்கள் உண்டு.

சோம்பு

பிரியாணி சாப்பிட்டுவிட்டு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க இனிப்பு சோம்பை சாப்பிடுவது வழக்கம். நாம் எப்போதெல்லாம் அதிக மாகச் சாப்பிட்டது போல உணர்கிறோமோ அப்போதெல்லாம் கொஞ்சம் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றால் போதும் எளிதில் ஜீரண மாகிவிடும். அவ்வகையில் வயிற்று உப்புசம் பிரச்சினைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும் பத்தே நிமிடத்தில் வயிறு காலியாகிவிடும்.

ஓமம்

வயிறு பொருமலாக இருந்தால் வயிற்றுக்குள் ஒருவித அசெளகரியத்தை உணர் வோம். அப்படி இருந்தால் நீரை கொதிக்க வைத்து 3 டீஸ்பூன் ஓமத்தைச் சேர்த்து ஆறவிடவேண்டும். தினமும் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இந்த நீரை குடித்துவந்தால் போதுமானது. புழுங்கலரிசி சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு, சிட்டிகை பெருங்காயம் சேர்த்து குடித்து வந்தால் பொருமல் பட்டென்று நிக்கும். குழந்தைகளாக இருந்தால் சிறித ளவு வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமம் சற்று காரத்தன்மையைக் கொண்டிருக்கும் என்பதால் வளரும் பிள்ளை களுக்குக் கொடுக்கும்போது ஓமத்துடன் சற்று சீரகம் கலந்து கொடுக்கலாம். மேலும் பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை சுட்டு விளக் கெண்ணெய், நல்லெண் ணெய் சம அளவு கலந்து அதில் குழைத்து வயிற்றின் மீது தொப்புளைச் சுற்றி பற்று போட்டாலும் வயிறு பொருமல் நீங்கும்.

பெருங்காயம்

சாப்பிட்டால்தான் என்றில்லாமல் எப்போதும் வயிறு உப்புசமாக இருக் கும். வயிற்றுக்குள் கல் வைத்தது போன்று கனமாக உணர்வோம். தண் ணீர் அருமருந்து என்று சொல்வார்கள். காலை வேளையில் ஒரு டம்ளர் நீரை அரை டம்ளர் அளவுக்கு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதில் சிட்டிகை பெருங்காயம் அளவு சேர்த்து பொறுமையாக உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும். காரம், மசாலா, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளித்த மோர் சாதத்தை உட்கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களிலும் ஆவியில் வேகவைத்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வர வேண் டும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

வாய்வு கோளாறு

வாயுத் தொல்லை இருந்தாலும் வயிறு உப்புசம் போன்ற உணர்விற்கும் உடலில் வாய்வு சேராமல் பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில் மூட்டுவலியும், மலச்சிக்கலும், செரிமானக்கோளாறும் என படிப்படியாக உருவாகும். புளியேப்பம் கூட வாய்வுக்கோளாறு அறிகுறிகளில் ஒன்றாக வும் சொல்லலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். பூ வாழைப்பழம் வாங்கி நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக நறுக்கவும். பெருங்காயத்தை மிளகு உருண்டை சைஸில் உருட்டிக் கொள்ளவும்.

ஒவ்வொரு வாழைப்பழத் துண்டுகளுக்கு நடுவில் பெருங்காயத்தை வைத்து அழுத்தி வாயில் போட்டு அப்படியே விழுங்க வேண்டும். தின மும் காலையில் ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே போதுமானது. தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிட்டால் உடலில் இருக்கும் வாயு கலைந்து வெளியேறிவிடும். அதிகப்படியான வாய்வு கோளாறை உணர்ந் தால் வேப்பம் பூவை உலர்த்தி வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...