உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்

 உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு களம் இறங்கக் காரணம் புஸ்ஸீ ஆனந்த் கொடுத்த வழிகட்டுதலும் திட்டமிடுதலும்தான் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ. ஆகி சிறந்த அரசியல் அனுபவம் உள்ள புஸ்ஸீ ஆனந்தை வைத்தே கடந்த சில நாட்களாக அரசியல் பயிற்சி கொடுக்கப்பட்டது.

ஏற்கெனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேரதலில் 160 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்ற வேட்பாளர்களைத் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டி, புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய் என்பது தெரிந்த செய்தி.

உணவிடும் புஸ்ஸீ ஆனந்த்

அரசியல் குறித்து எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் தனது கொடியோ படமோ எதையும் பயன்படுத்தக்கூடாது என்று சொன்ன பிறகும் அவர்கள் இப்படி யொரு வெற்றியைப் பெற்றது விஜய்யை இயக்கத்துக்கு மக்கள் மத்தி யில் மதிப்பை உயர்த்தியிருக்கிறது. இதனால் இவர்களுக்குச் சரியான வழிகாட்டு தலையும் வியூகங்களையும் வகுத்துக் கொடுக்கவேண்டும் என்று புஸ்ஸீ ஆனந்த் மூலம் கலந்தாலோசித்து இருக்கிறார் விஜய்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களை எந்த வகையில் எல்லாம் கவர லாம், அவர்களுக்கு என்ன மாதிரியான பணிகளைச் செய்து கொடுக்கலாம் என்றெல் லாம் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, முக்கிய கட்சி என்கிற எந்தக் கவலையும் இல்லாமல் விஜய் கட்சியின் தலைமை சொன்னதைத் தலைமேல் வைத்துக் கொண்டு பம்பரமாகச் சுழன்று பணியாற்றிவருகிறார்கள் விஜய் ரசிகர்கள். வார்டு வார்டாக இருக்கும் பிரச்சினைகளைப் பட்டியல் போட்டு அவற்றை நேரடியாக மக்கள் துணையோடு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்ட சென்றிருக்கிறார்கள்.

அவற்றில் சில பணிகளை உடனடியாக அதிகாரிகள் முடித்தும் கொடுத்திருக் கிறார்கள். இதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல ஊர்களில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத்தான் எங்கள் ஓட்டு என்று அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்கள்.

களத்தில் இறங்கிப் போட்டிபோடும் பிரதான அரசியல் கட்சிகள்கூட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குக் கிடைத்திருக்கும் மக்கள் செல்வாக்கைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

பிரபல கட்சி செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்தவர்களுக்கு விஜய் ரசிகர் கள் தங்கள் உழைப்பால் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள். இது பல ஊர்களிலும் நடந்து வருகிறது. இது எல்லாமே தலைமை கொடுத்த உத்தரவுதான் என்கிறார்கள் விஜய் தரப்பைச் சேர்ந்தவர்கள்.

விஜய்யைப் பொறுத்தவரை குறிவைத்து வெற்றியை அடைய வேண்டும் என் பதே அவரது நோக்கம். அதனால் வெற்றி பெறும் தொகுதியைக் கண்ட றிந்து அங்கு நின்று ஜெயிக்க வேண்டும் என்பதே விஜய் மக்கள் இயக்கத்தின் திட்டம். அதற்கு ஏற்ப, குறிப்பிட்ட வெற்றி வாய்ப்புள்ள  வார்டுகளில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் ஓசையின்றி களம் இறங்கி வருகிறார்கள்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைப்பார்கள் என்பது நிச்சயம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...