பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகளில் இனி மாணவர்களை ‘ப‘ வடிவில் அமரவைக்க வேண்டும் என இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு, தான் கடைசி பெஞ்ச் என்ற எண்ணம் உருவாகாத வகையில் இத்தகைய அறிவிப்பை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும்,ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘ப‘ வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
Category: அண்மை செய்திகள்
ஏர் இந்தியா விமான விபத்து – வெளியானது முதல்கட்ட அறிக்கை..!
விமானி ஒருவர் எரிபொருளை ஏன் நிறுத்தினீர்கள்? என்று கேட்டார். அதற்கு மற்றொரு விமானி தான் நிறுத்தவில்லை என்று பதில் அளித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர…
அடுத்த மாதம் 29-ந் தேதி புரோ கபடி லீக் போட்டி தொடக்கம்..!
போட்டி நடைபெறும் இடம், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக்…
பிரேசிலின் உயரிய விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவிப்பு..!
பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார். பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று பிரேசில் சென்றார். பிரேசிலில்…
