Tags :மாயா

நகரில் இன்று

புது மணப்பெண்ணை வெட்டி கொன்ற கொடூரன்

திருமணம் கட்டிகொடுத்த ஒரு வாரத்தில் பெற்ற மகளை நாசமாக்கிய தந்தை..!! கதறி கதறி அழுத மாப்பிள்ளை…!! பேரையூர் அருகே மதுபோதையில் ,  பெற்ற மகளை  தந்தையே  அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண்  வெட்டப்பட்டுள்ளது  மதுரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் ,  சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வரும் இவர் தனது இரண்டாவது மகள் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில், 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அளிக்கக்கூடிய வகையில் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு “விரைவில் நகரும் ரேஷன் கடைகள்” – […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

டெல்லி என்கவுன்டர்: இருவர் சுட்டுக்கொலை. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக போராட்டம். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும், 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழப்பு. தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி […]Read More

முக்கிய செய்திகள்

சென்னையில் ஒரு ஷாகீன் பாக்..!

முன்கூட்டியே மோப்பம் பிடித்த உளவுத்துறை..! கோட்டைவிட்ட சென்னை போலீஸ்..! சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித சிரமும் இன்றி அவர்களால் அனுமதி பெற முடிந்தது- காரணம் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க […]Read More

கைத்தடி குட்டு

விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு அதை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார். 2010-ல் மத்திய அரசிடம் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று, 2011ல் ஆய்வு பணிகளுக்கு அனுமதி அளித்த‌து திமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் ஆய்வு […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்: (பிப்ரவரி 11, 1847)

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய சில தகவல்கள்:அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, […]Read More

நகரில் இன்று

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு! இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET July 2020) அறிவிப்பினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.Read More

நகரில் இன்று

அடிதூள்…வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!!

அடிதூள்… 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!! நிம்மது பெருமூச்சுவிடும் குடும்ப தலைவிகள்…!! கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை அதிரடியாக சரிந்துள்ளது . குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது .  வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது .  இதனால் அதன் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை […]Read More

அண்மை செய்திகள்

இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை.

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் திறந்திருக்கும்.சுற்றுலாவையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் இலக்குடன் இத்திட்டம் இன்று அமலுக்கு வருகிறது.கடற்கரைகள் அமைந்துள்ள ஜூஹூ, சவுபாட்டி, வோர்லி உள்ளிட்ட இடங்களிலும் பாந்த்ரா குர்லா வணிக வளாகம், நாரிமன் பாயின்ட் உள்ளிட்ட இடங்களிலும் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட கே-4 ஏவுகணை – கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக சோதனை வெற்றி. 22ம் தேதி பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யாத அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடும் எச்சரிக்கை – வரும் 28ம் தேதி மாலை 4 மணிக்குள் விளக்கம் தர உத்தரவு.வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை பிப்ரவரி 2-ம் வாரத்திற்குள் முடித்து அரசாணை […]Read More