விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

 விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்
சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு அதை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார். 2010-ல் மத்திய அரசிடம் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று, 2011ல் ஆய்வு பணிகளுக்கு அனுமதி அளித்த‌து திமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் ஆய்வு பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என அப்போதைய திமுக அரசு கூறியது – அமைச்சர் ஜெயக்குமார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...