கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவன்-மனைவி, மகன் தற்கொலை!!

தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் கடன் தொல்லையால் ஒரே கும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் என 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச்  சேர்ந்த மிட்டாய் வியாபாரியான சந்தானம்(57) அவரது மனைவி லட்சுமி(47), பொறியியல் பட்டதாரியான ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் கீழ் ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார்கள். 

  இந்நிலையில், கடன் தொல்லையால் மனமுடைந்த சந்தானம் அவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் ஆரோக்கிய ஸ்ரீதர் மூவரும் பொங்கல் அன்று இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைப்பார்த்த அவர்களது மகள் ஜோதி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து மூவரையும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  சிகிச்சை பலனின்றி சந்தானம் 16 ஆம் தேதி உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை (ஜன.17) லட்சுமி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஆரோக்கிய ஸ்ரீதரும் நேற்று இரவு உயிரிழந்தார். 

  கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் என மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!