திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

 திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

  திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

  திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள சின்னகானூரில் உள்ள ஒரு கிடங்கில் எரிசாராயம் பதுக்கிவைத்துள்ளதாகக்  கோவை மதுவிலக்குத் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது.

  இதன்பேரில் அந்த இடத்துக்கு விரைந்து வந்த தனிப்படையினர் கிடங்கில் நடத்திய சோதனையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தைக் கைப்பற்றினர்.

மேலும், இந்த எரிசாராயம் எங்கிருந்து வந்தது என்றும், இதனைப் பதுக்கிவைத்த வர்கள் குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...