மீண்டும் “கூலி” படப்பிடிப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

 மீண்டும் “கூலி” படப்பிடிப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்குப் பின் மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்திடம் சில வாரங்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், ஓய்வு முடிந்து தற்போது ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...