ஆந்திராவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !!

அவங்கள நான் படிக்க வைப்பேன் !! ஜெகன் மோகன் உருக்கம் !!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று  ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய மதிய உணவு திட்டத்தில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு விதமான உணவு வகைகள் வழங்குவதோடு ஒரு இனிப்பு மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதே போல் ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000  ரூபாய் வழங்கும் அம்ம வடி  திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். 

அப்பொழுது பேசிய ஜெகன்மோகன் ,  குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களின் வருங்காலத்தை கேள்விக்குறியாக மாற்றக்கூடிய நிலை உள்ள நிலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுக்கு 15,000 ரூபாய் அந்த  தாயாரை கவுரவிக்கும் விதமாக  வழங்கப்பட்டுள்ளது. 
இதன் மூலமாக 82 லட்சம் மாணவ மாணவிகளுக்கும் 42 லட்சம் தாயார் பயன் அடைகின்றனர்.
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!