‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

  ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வரும் 25ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்கினார். இதனையடுத்து, அவர் ‘கடைசி உலகப் போர்’ என்ற மூன்றாவது படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன், இசையும் அமைத்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி. இத்திரைப்படத்தில் நாசர், அழகன் பெருமாள், அனகா,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிய இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 25-ஆம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...