‘டாடா’ பட இயக்குநருடன் இணையும் “ஜெயம் ரவி”..!

 ‘டாடா’ பட இயக்குநருடன் இணையும் “ஜெயம் ரவி”..!

ஜெயம்ரவியின் 34வது படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே, எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’.

இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின், முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, ஜெயம்ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக JR 34 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கவுள்ளதாக, போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...