‘பிரதர்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!

  ‘பிரதர்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் ‘பிரதர்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு செய்தனர்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே, எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்கள் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...