பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் ஜெயம் ரவி..!

 பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து ரிலீசான இறைவன் மற்றும் சைரன் படங்கள் சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தன.

இந்நிலையில் அடுத்ததாக பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி மினிமம் கேரன்டி ஹீரோவாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த படங்களாக வெளியான இறைவன் மற்றும் சைரன் படங்கள் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயம் ரவி காணப்படுகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்தடுத்த கமிட்மென்ட்களை அறிவித்து வருகிறார் ஜெயம் ரவி.

அடுத்ததாக தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த பிரச்சனைகள் நிலவி வருவதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் தள்ளி போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்ததாக மோகன் ராஜாவும் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவர் அஜித்திற்கு ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் எதில் அவர் இணைவார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...