டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ

 டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் என்றும், 44 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவுக்கு அட்லாண்டா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்த நபரை யாரால் மறக்க முடியுமென்றும் லியாண்டர் பயஸ்-க்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகழாரம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அணி 4 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த லியாண்டர் பயஸ், பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இருந்ததால் தான், தங்களால் பாகிஸ்தானை வீழ்த்த முடிந்தது என்றும், அதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி என தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் படி ட்விட்டரில் கருத்து தெரிவித்த போததே அமைச்சர் கிரண் ரிஜிஜூ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...