மகனின் துக்க நிகழ்ச்சியில் ஹெல்மட் விநியோகம் செய்த தந்தை
மத்தியப் பிரதேசம் தாமோ எனுமிடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை நெகிழ வைக்கும் ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் கலந்துக் கொண்ட உறவினர்கள் அனைவருக்கும் அவர் ஹெல்மெட்டுகளை பரிசாக வழங்கி, இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் செல்லாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக் கொண்டார்.
தமது மகன் ஹெல்மட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக அவர் கண்கலங்க கூறினார்.
