ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம்

ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்( alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் தொடர்பான சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் அளித்துவருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், கூகுளின் சிஇஓ என்ற பொறுப்புடன் சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் நிறுவவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பு கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!