ஐந்து வகையான சாதம்

1) மும்பை சாதம் தேவை:

பச்சரிசி
அரை கப், தோலுடன்
உடைத்த பாசிப் பருப்பு 1 கப்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பச்சை மிளகாய் 2, 
நெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவைக்கு.

செய்முறை:

குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள். இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்

2) கதம்ப சாதம் தேவை: 
பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப்
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப்,
சின்ன வெங்காயம் 10, 
தக்காளி 5, 
சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன்,
புளி கரைசல் அரை கப்
பெருங்காயம்
மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்
எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கு.

செய்முறை
:

காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்

3) எள் சாதம் தேவை:
உதிராக வடித்த சாதம் 2 கப்
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கு.

பொடிக்க
:
எள் – 2 டேபிள் ஸ்பூன்,
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 8, 
தேங்காய்த் துருவல்  2 டேபிள் ஸ்பூன்
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!