துளசி எப்படி வந்தது?

 துளசி எப்படி வந்தது?

துளசி எப்படி வந்தது?


துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது


துளசி எப்படி வந்தது?
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர்.

அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மகாலட்சுமி, ஆகியன உண்டாகி வெளியே வந்தன.

இதனால் பகவான் விஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் திவலை அமிர்த கலசத்தில் விழுந்தது.

அந்த திவலையின் உருவமாகப் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கெளதுஸ்பம் ஆகிய மூன்றை மட்டும் மகா விஷ்ணு தன்னுடன் வைத்துக் கொண்டு. மற்றவற்றைத் தேவர்களுக்கு வழங்கினார்.

துளசியில் இருக்கும் தெய்வாம்சம்:
துளசியின் அடியான தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினிதேவர் இருவர் ஆகியோர் இருக்கின்றனர்.
துளசி இலையின் நுனியில் பிரம்மன், நடுவில் மாயோன் மற்றும் லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, காயத்திரி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியின் அருள்:

  • துளசியை நினைத்தாலே நம் பாவங்கள் நீங்கும் என்கின்றனர் ஆன்மிக அருளாளர்கள். துளசியை காப்பாற்றுபவன், அதாவது அதை வளர்த்துப் பாதுகாப்பவன் பரமாத்மா ஆகின்றான்.
  • துளசியை தெய்வமாக வழிபட்டால் அவருக்கு ஆயுள் பலம் பெருகுவதோடு, மக்கட் பேறு, புகழ், செல்வம் முதலியவை பெருகும்.
  • துளசி கஷ்ட மாலை (துளசி கட்டை மாலை) ஒருவன் தன் கழுத்தில் அணிந்தால், அவனின் பாவங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.
  • துளசி தீர்த்தத்தைப் பருகி வந்தால் அவன் பரமபதம் அடைவார் என்றும் ஆன்மிக குருக்கள் கூறுகின்றனர்.
  • துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...