சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..! | நா.சதீஸ்குமார்

 சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..! | நா.சதீஸ்குமார்

இன்று அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து  திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்து ஒரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...