வரலாற்றில் இன்று (07.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.
878 – லூயி, திக்குவாயர் (லூயி தி ஸ்தாமரர்) மேற்கு பிரான்சியாவின் அரசனாக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூட்டப்பட்டார்.
1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1191 – சலாகுத்தீனை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அற்சுப்பில் நிகழ்ந்த சண்டையில் தோற்கடித்தார்.
1228 – புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.
1539 – குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
1812 – நெப்போலியன் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
1821 – வெனிசுவேலா, கொலம்பியா, பனாமா மற்றும் எக்குவாடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரான் கொலம்பியாக் குடியரசு உருவானது. சிமோன் பொலிவார் இதன் தலைவர் ஆனார்.
1822 – பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1860 – லேடி எல்ஜின் நீராவிக்கப்பல் மிச்சிகன் வாவியில் மூழ்கியதில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகரில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1942 – உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
1965 – இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.
1986 – சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
1988 – ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1998 – கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.
1999 – ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
2004 – சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.

பிறப்புகள்

1533 – முதலாவது எலிசபெத், இங்கிலாந்தின் அரசி, (இ. 1603)
1913 – அப்துல் காதர் லெப்பை, இலங்கை கவிஞர் (இ. 1984)
1929 – ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
1953 – மம்முட்டி, மலையாள ந்டிகர்
1984 – பர்வீஸ் மவுரூவ், இலங்கையின் துடுப்பாளர்
1984 – மாலிங்க பண்டார, இலங்கையின் துடுப்பாளர்

இறப்புகள்

1949 – எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
1997 – மொபுட்டு செசெ செக்கோ, சயீரின் குடியரசுத் தலைவர் (பி. 1930)
2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)

சிறப்பு நாள்

பிரேசில் – விடுதலை நாள் (1822)
மொசாம்பிக் – வெற்றி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!