“ஞான குருவே” – உதயம் ராம்

உருவத்தில் இல்லை அழகு
உலகுக்கு உணர்த்தியவனே

எளியோரும் நண்பரென
மூஞ்சுறுவை வாகனமாக்கி
முன்னிறுத்திய முதல் மறையே

புல்லும் புனிதமே என்பதை
புரிய வைத்தவனே

மாளிகையானாலும்
மரத்தடியானாலும்

மனத்தில் இருப்பதே
மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே

அகமும் புறமும் தூய்மையானால்
வாழ்க்கை பூரணமாய் இனிக்கும் என்ற
மோதகப் பிரியனே

அன்னையும் பிதாவுமே அகிலம் என்பதை
அண்ட சராசரத்துக்கு
அன்பாய் அறிவித்தவனே

எப்படி அழைத்தாலும்

எவர் அழைத்தாலும்

எங்கு அழைத்தாலும்

பிடித்து வைத்த பிள்ளையாய்

பிரசன்னமாவனே-நீ

பிறந்திட்ட இந்நாளில்

பிரச்சனைகள் விலகட்டும்

பிரபஞ்சம் செழிக்கட்டும்.

அன்புடன்

உரத்த சிந்தனைக் குடும்பம்

ஓவியம் – ஸ்ரீகாந்த்

கவிதை – உதயம் ராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!