பிக்பாஸ் டீமை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்! | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸ் டீமை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்று வருகிறது. கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பரபரப்பினை கிளறி வருவதோடு பெரும் விவாதங்களையும் கிளறி வருகிறது.

அதில் மிகவும் தந்திரமான போட்டியாளராக விளையாடி வந்தவர் பிரதீப் ஆண்டனி. அவரைப்போல் அந்த வீட்டின் விதிமுறைகளை தெரிந்த ஆள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி விளையாடி வந்தார். அவரை நாமினேட் செய்தாலும் வெளியேற வாய்ப்பில்லாததால், மேனியூப்ளேட் மாயா, பூர்ணிமா ஆகியோர் கேங்காக பேசிவைத்து அவர்மீது உரிமைக்குரல் மூலம் அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தனர்.

பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இலை என மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீணா ஆகியோர் ஒன்றாக புகார் கொடுத்ததை அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய கமல் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

பிரதீப் தரப்பு நியாயத்தை பேச கூட வாய்ப்பளிக்காமல் அவரை வெளியே அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் குறித்து இணையதளத்திலும் சோஷியல் மீடியா தளத்திலும் கார சார விவாதம் நடந்து வருகிறது.

எந்த ஒரு வார்னிங்கே கொடுக்காமல் ப்ரதீப்பை வெளியேற்றியது தவறு என பலரும், வாய்க்கு வந்தபடி பேசிவரும் ப்ரதீப் வெளியேற்றியதே சரி என ஒருசிலரும் வாதிட்டு வருகிறார்கள்.. ப்ரதீப் அவர் தரப்பில் பேச வாய்ப்பே தரப்படவில்லை என ஆதங்கப்பட்டு வருகிறார்கள் சிலர்.

இந்த விவகாரம் வைரலான நிலையில் பலரும் எண்டமால் டீமையும், விஜய் குழுமத்தாரையும் , கமலஹாசனையும், மாயா , பூர்ணிமா குரூப்களையும் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...