பிரதீப் கூல் சுரேஷுக்கும் இடையே வலுத்த சண்டை: பிரதீப்பிற்கு எதிராக பிக்பாஸ் வீடு! | தனுஜா ஜெயராமன்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை 7வது ஆண்டாக தொடர்ந்து  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே காதல், மோதல் என சென்று கொண்டிருக்கும் நிலையில் , பிக்பாஸ் ரசிகர்களிடையே இந்த சீசன் முந்தைய சீசன்களை விட படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது எனலாம்.

பிக்பாஸின் மணி டாஸ்கில் நேற்று தலைக்கு மேல் ஒரு மணி வைக்கப்பட்டு அதை ஒலி எழுப்பாமல் யார் வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது.

அந்த போட்டியின் முடிவில் யார் மணி ஒலி எழுப்பினார்கள் என்று தோற்ற போட்டியாளர்களிடமே கேட்கப்படுகிறது. அன்னபாரதி , ரவீனா, பிரதீப் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

பிரதீப் பெயரை சொன்ன கூல் சுரேஷை சட்டென்று வழக்கம் போல கெட்டவார்த்தையால் திட்டிவிடுகிறார் பிரதீப். யாராவது கேட்டால் அப்படி தான் திட்டுவேன் என திமிராக பேசுகிறார்.

இதனால் கடுப்பான கூல் சுரேஷ் வீட்டை விட்டு உடனே வெளியேறுவதாக கூறி லக்கேஜ் எடுத்துக்கொண்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டாளர்களுக்கும் பிரதீப் சொன்னது பிடிக்காமல் கேள்விக் கேட்கிறார்கள். அதற்கு பிரதீப் ”அப்படித்தான் சொல்வேன்” என்று விடாமல் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்கிறார்.

“ஒரு மன்னிப்பாவது கேட்கலாம்”என்று கூறிய பூர்ணிமா மற்றும் சகப் போட்டியாளரிடமும் பிரதீப் ”உன் வேலைய பாருங்க ” என்று முகத்திலடித்தார் போல கூறி அனைவரிடமும் எரிந்து விழுகிறார். கூல் சுரேஷ் மன்னிப்பெல்லாம் கேட்க வேணாம் போ என கோபமாக கத்துகிறார்.இதனால் முழு பிக்பாஸ் வீடும் பிரதீப்பிற்கு எதிராக நிற்கிறது.

முடிவில் பல்வேறு சர்ச்சைகளிடையே விசித்ரா ஜெயித்ததாக கூறி அறிவித்து கோல்ட் பேட்ஜ் கொடுத்து போட்டியை முடித்து வைக்குறார்கள்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் , பிரதீப் ஆண்டனி இடையேயான பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இது போன்ற மோசமான ஆட்டங்களால் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!