பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்டரி இவர்களா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்டரி இவர்களா? | தனுஜா ஜெயராமன்

கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் வைல்ட் கார்ட் என்டரி குறித்த ப்ரமோக்கள் விஜய் டிவியில் வந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் யார் என்ற ஆருடங்களும் ரூமர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டும் உள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் 15 பேர் இருக்கின்றனர்.  இந்த வீட்டில் விளையாட்டுகள்  போட்டிகள் கடும் தீவிரமாக இருக்கின்றது. பிக்பாஸ் ஷோவை இன்னும்  தீவிரமாக்க 5 வைல்டு கார்டு எண்ட்ரிகள் வரவுள்ளனர். அவர்கள் யார் என்ற கேள்வி அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளதாம்.

பிக்பாஸ் சீசன் 7 வைல்ட் கார்டில் வி.ஜே அர்ச்சனா வரவுள்ளார். இவர் ராஜா ராணி  சீசன் 2 இல்  நடித்துப் பிரபலமானார்.  கானா பாலா வருவதும் உறுதியாகியுள்ளது. கானா பாலா தனது பாட்டுகளால் பெயர் பெற்றவர். ‘ஆடி போனால் ஆவணி’ பாடல் அட்டக்கத்திப் படத்தில் பிரபலமான ஒன்றாக இருந்தது. ‘நடுக்கடல கப்பல்’ பாடலும் இவர் பாடியுள்ளார்.

விஜய் டிவி  தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த்   பிக்பாஸ் சோவில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். போன சீசனில் ப்ரியங்கா கலந்து கொண்டு கடைசிவரை வந்தார்.

மேலும் இவருக்கு அடுத்து சினிமா மற்றும் சீரியலில் நடித்த பப்ளு வர இருக்கிறாராம்.

அடுத்த வைல்ட் கார்ட்  போட்டியாளராக நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா பங்கேற்கிறார்.

ஏற்கனவே மாயா, ப்ரதீப், விஷ்ணு , பூர்ணிமா , விசித்ரா போன்றோர் டைட்டில் எனக்கு தான் என சண்டையிட்டு கொள்ள இப்போது புதிதாக வரும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்ய போகிறார்கள் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...