பிக்பாஸ் நடிகைக்கு நேர்ந்த சோகம்…!

 பிக்பாஸ் நடிகைக்கு நேர்ந்த சோகம்…!

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. ரஷிதா போன சீசனின் பிக்பாஸ் போட்டியாளராகவும் களம் இறங்கினார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார்.

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருமண வாழ்க்கையால் மன வருத்தத்தில் இருக்கும் ரஷிதாவிற்கு அடுத்த பேரதிர்ச்சியாக அவரது தந்தை காலமாகி இருக்கிறார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரக்ஷிதா இன்னும் சட்டப்படி விவகாரத்து பெறவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தனது பெற்றோர்களை காண பெங்களூருக்கு தான் அதிகம் செல்வார். மேலும,  அப்பாவின் உடல் நலன் சரியில்லாததால் ரச்சிதா ஏற்கெனவே தந்தையை உடனிருந்து கவனித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அவரது தந்தை காலமானது ரக்ஷிதாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சென்னையிலிருந்த தினேஷுக்கு ரச்சிதாவின் வீட்டிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட, தற்போது அவர் பெங்களூரு விரைந்திருக்கிறார். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் மனைவியைச் சந்தித்ததாகச் சொன்ன தினேஷ் இப்படியான ஒரு துக்க நிகழ்வில் மீண்டும் மனைவியைச் சந்திக்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...