பரபரப்பான பிக்பாஸ் டாஸ்க்கள்…. அடிதடி என அதகளம் செய்யும் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா , மாயா, பிரதீப் , ஐஷூ ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆக்சிஜன் டாஸ்க்கில் ஆக்சிஷன் சிலிண்டர்களை கைப்பற்றும் முயற்சியில் போட்டியாளர்களிடையே அடிதடி சண்டை நடைபெற்றதை பார்க்க முடிந்தது. கண்ணாடியெல்லாம் உடைந்ததை தொடர்ந்து அந்த டாஸ்க் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வெளியிடப்பட்ட முதல் ப்ரமோவில் ஷாப்பிங் ரீபேஸ்மெண்ட் டாஸ்க் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த டாஸ்கில் தோற்ற பிக்பாஸ் வீட்டார், வீட்டில் சமைக்கப்படும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டது.

இதனால் ஒருசிலருக்கு சாப்பாடு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மாயா, சரவணன் உள்ளிட்டவர்கள் கேப்டன் யுகேந்திரனிடம் சண்டையிட்டதையும் அடு்த்தடுத்து  வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் பார்க்க முடிந்தது.

இந்த விஷயத்தில் ஜோவிகாதான், ஐடியா கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து சாப்பாட்டில் கைவைத்தால் யுகேந்திரன் விரைவில் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்றும் அவர்கள் ஆக்ரோஷமாக தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!