ஆளாளுக்கு ப்ளான் செய்து சகப் போட்டியாளரை கதறவிடும் பிக்பாஸ் ஹவுஸ்! | தனுஜா ஜெயராமன்

 ஆளாளுக்கு ப்ளான் செய்து சகப் போட்டியாளரை கதறவிடும் பிக்பாஸ் ஹவுஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக அதாவது தனி கேங்க் உருவாக்குவது  எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கமாக நகர்கின்றது.

பிக்பாஸ் வீட்டைப் பொருத்தமட்டில் மாயா வில்லியாகப் பிளான் செய்து காயை நகர்த்துகிறார். பூர்ணிமாவும் மாயாவை பின்தொடர்ந்து அதிக சப்போர்ட் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். இருவரும் ஏனோ ஜோவிகாவை டார்கெட் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேரக்டராக வலம்வரும் பிரதீப்  வேண்டுமென்றே  நிக்சனுடன் சண்டை போடுகிறார். அவரைத் தூண்டிவிடுகின்றார் இதன் காரணமாகக் கொதித்து எழுந்த நிக்சன் ‘என்னைக் குறை சொல்ல உனக்கு என்ன அருகதை’ இருக்கின்றது, நான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்து மிகுந்த நொந்து போகின்றார். மீண்டும் அவரை கெலி செய்யும் விதமாக பிரதீப் ‘நீ ஒரு வீரன் இல்லை ‘என்று  விளையாடத் தகுதி இல்லையெனவும் கூறுகிறார்.

சின்ன பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒரு அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். கூல் சுரேஷ், மாயா , விஷ்ணு, விஐய் என மூவரும் சில திட்டங்களை தீட்ட, ப்ரதீப் தனியாக கேம் ஆடுகிறார்.

டாஸ்கில் விசித்ராவை சேர்க்கவில்லை என்று கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் விசித்ராவை தூண்டி விடுகின்றனர். இதனால் விசித்ரா உள்ளுக்குள் குமைகிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவருமே தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பலவகையில் முயற்சிக்கின்றார். போட்டியாளர்கள் இரண்டாம் வாரமே சண்டையில் பிக்பாஸையே தலையை பீய்த்துக் கொள்ள வைக்கிறார்கள். இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ?

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...