முதல் எவிக்‌ஷனில் இவரா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரமே சண்டையும் கலாட்டாவும் நிறைந்ததாக சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறுபவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்த வார எவிக்‌ஷனில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வெளியேற்றும் படலம் நடக்கும்.

இதில் யார் வெளியே போகப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதன்படி பவா செல்லதுரை, விசித்திரா, யுகேந்திரன் ஆகிய மூன்று பேரில் யாராவது ஒரு ஆள் முதலில் வெளியே செல்லலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதலில் வீட்டை விட்டு வெளியேறுபவர் குறித்து புதிய தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.

அதன்படி அனன்யா ராவ்தான் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் இதுவரை குறைந்த வாக்குகளே பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கடைசி நேர மாற்றங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

விசித்ரா ஜோவிகா மோதல்

பவாவின் எச்சை துப்பல் விவகாரம்

விசித்ராவின் டாமினேஷன்

விஷ்ணு ப்ரதீப் கூல் சுரேஷ் அலப்பறைகள் என இந்த வார இறுதியில் கமல் அவர்களால் விவாதிக்கபடலாம்

இன்று சனிக்கிழமை கமலஹாசன் வரும் இந்த சீசனின் முதல் வார நிகழ்ச்சி பரபரப்பிற்கு சற்றுமே பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!