2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள்

 2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள்

2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று!

🥷முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது.

🥷30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடி பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 2 கோடி பேர் உயிரிழந்தனர். அதாவது ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.

🥷ஏறத்தாழ, 15 லட்சம் இந்திய வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 74 ஆயிரம் பேர் பலியாகினர்.

🥷குதிரைப்படை, யானைப்படைகளைக் கொண்டு, போர் நடத்திய வீரர்கள், முதன் முதலாக நவீன ஆயுதங்களை பயன்படுத்தி போரிட்டனர்.

🥷இந்த போரில் முதல் முறையாக விமானம்தாங்கி கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

🥷இப் போரில் பீரங்கி பொருத்தப்பட்ட டாங்குகளை ஆண் டாங்கிகள் என்றும், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட டாங்கிகளை பெண் டாங்கிகள் என்றும் அழைத்தனர்.

🥷முதலாம் உலகப் போரின்போது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு தகவல்களை அனுப்ப, ராணுவ வீரர்கள் நாய்களையும், புறாக்களையும் பயன்படுத்தினர்.

🥷முதலாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கு 30 பில்லியன் டாலர்கள் செலவானது.

🥷முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்ட்ரோ ஹங்கேரியன், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஒட்டோமன் சாம்ராஜ்யங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன.

🥷முதலாம் உலகப் போரில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடாக ரஷ்யா இருந்தது. அந்நாட்டுப் படையில் 12 மில்லியன் வீரர்கள் இருந்தனர்.

🥷முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் அமெரிக்கா, மிகப் பெரிய ராணுவ வல்லரசாக மாறியது.

🥷இப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அந்நாடு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

🥷முதலாம் உலகப் போரில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...