விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது!

 விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது!


விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து (ex mla) 15 புதிய கிளை மன்றங்களைத் திறந்து 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு, கல்வி உதவித் தொகை, வேட்டி, சேலை, மரக்கன்றுகள், மளிகைப் பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000 பேருக்கு அன்னதானம்  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், இளைஞர் அணி தலைவர் பிரபு விக்னேஷ், மல்லசமுத்திரம் ஒன்றியத் தலைவர் கந்தசாமி, செயலாளர் லோகேஷ்வரன், து.செயலாளர் தரனேஷ்குமார், தொண்டரணி கலை, ராஜா, பரத், ராமச்சந்திரன், சௌந்திரராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...