மனிதர்கள் வாழத் தகுதியான இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

 மனிதர்கள் வாழத் தகுதியான இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம்

சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மேத்யூ லபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

சூரியனில் இருந்து ஆறாவதாக சனிக்கோள் உள்ளது. சூரியன் – சனி இடையி லான துாரம் 147 கோடி கி.மீ.

சனிக் கிரகமும் ஒரு சிறிய சூரியக் குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவு களால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியைப் போலவே தோற்றம் அளிக்கிறது. இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள்.

ஏனென்றால் இந்த டைட்டனில் ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை யும் இந்த டைட்டனில் இருக்கிறது. பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்று விஞ்ஞானிகள் அழைக் கிறார்கள்.

பருவ நிலைகளால் இயக்கப்படும் உலகளாவிய மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதை விட வெவ்வேறு பொருட்களால் நிரம்பியுள்ளன. திரவ மீத்தேன் நீரோடை டைட் டனின் பனிக்கட்டி மேற்பரப்பில் படிந்துள்ளன. நைட்ரஜன் காற்று ஹைட்ரோ கார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது.

டைட்டனின் தனித்துவமான குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதளமான நிலப் பரப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் புவியியலாளர் ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது வெளிப்படுத்தியுள்ளது.

புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் ‘பருவகாலச் சுழற்சி டைட்டனின் மேற்பரப்பில் துகள்களின் இயக்கத்தை எவ் வாறு இயக்குகிறது’ என்பதைக் காட்டுகிறது. மேலும் பருவகால நீரோட்டச் சுழற் சியுடன் பூமியின் அம்சங்களைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நீண்டகால மாக இந்த மர்மமான உலகத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி குறித்து புவியியலாளர் மேத்யூ லபோட்ரே கூறியதாவது:-

பூமியில் உள்ள குன்றுகள் சிலிக்கேட் பாறைகள் மற்றும் தாதுக்களால் உருவா கின்றன. அவை காலப்போக்கில் வண்டல் துகள்களால் அரிக்கப்பட்டு, காற்று மற்றும் நீரோடைகள் வழியாக நகர்ந்து வண்டல் அடுக்குகளில் படிந்து இறுதியில் அழுத்தம், நிலத்தடிநீர் மற்றும் சில நேரங்களில் வெப்பத்தின் உதவியுடன் மீண் டும் பாறைகளாக மாறும். டைட்ட னில் இதே போன்ற செயல்முறைகள்தான் குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதள நிலப்பரப்பை உருவாக்கியது.

ஆனால் பூமி, செவ்வாய், வீனஸ் போல இல்லாமல் டைட்டனில் படிவுகள் திடமான கரிம சேர்மங்களால் ஆனது என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படை கரிமக் கூறுகள் எவ்வாறு துகள்களாக மாறமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறார்கள்.

காற்றுகள் துகள்களைக் கொண்டுசெல்லும்போது துகள்கள் ஒன்றோடொன்று மேற்பரப் புடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் காலப்போக்கில் துகள்களின் அளவைக் குறைக்கின்றன. காலப்போக்கில் மணல் துகள்கள் நிலையான அள வில் பராமரிக்கப்படுகின்றன.

கரீபியனில் பகாமாசை சுற்றியுள்ள ஆழமற்ற வெப்பமண்டலக் கடல் பகுதியில் பெரும் பாலும் காணப்படும் சிறிய, கோளத் துகள்களான ஒயிட்ஸ் எனப்படும் பூமியில் உள்ள வண்டல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் விஞ்ஞானிகள் குழு படிவுகளுக்கான பதிவைக் கண்டறிந்தது. கால்சியம் கார்பனேட் நீர்நிலை களிலிருந்து இழுக்கப்பட்டு குவார்ட்ஸ் போன்ற துகள்களைச் சுற்றி அடுக்குகளில் சேரும்போது இந்தப் படிவுகள் உருவாகின்றன.

இதன் மூலம் டைட்டனில் உள்ள மணல் திட்டுகளின் முரண்பாட்டை ஆராய்ச் சியாளர்களால் தீர்க்கமுடிந்தது. துகள்களை ஒரே துண்டாக இணைத்து சம நிலையை ஏற்படுத்து வதே இதற்குக் காரணம்” என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.

மேலும் டைட்டனின் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந் துள்ளது. டைட்டன் எனப்படும் மாற்று உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத் தும் வித்தியாசமானவையாக உள்ளன. ஆனால் அவை பூமியின் தன்மையுடன் காணப்படுகிறது என்பது கவரும் அம்சமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...