பெண்ணே நெஞ்சம் பதைபதைத்து துடிக்கிறது காமுகனை அணுஅணுவாய் அடித்துக் கொன்றாலும் ஆத்திரம் அடங்கப் போவதில்லை ஆனாலும் பெண்ணே நீ விழித்துக்கொள் மாய வார்த்தைகளில் மயக்கம் கொள்ளாதே பார்வையையும் புத்தியையும் கூர்மையாக்கு பாதங்களின் ஒவ்வொரு அடியிலும் தாய் தந்தையை சற்று நினைத்துக் கொள் பாவிகளின் உலகத்தில் பத்திரமாய் இருந்து கொள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ கற்றுக்கொள் பெண்ணே…Read More
இரத்தத் திட்டுக்களாய் ! கருவில் திரண்டுவிட்டேன் அசைவையும் மூச்சையும் சுவாசித்து கருவறை இருளில் உருவாய் மாறிய நேரமே ! என் குறி குறித்த சோதனையிலேயே கூசித்தான் போனேன் ?! பிறப்பிலேயே குருதி பூசியதாலோ என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திர மூன்று நாட்களை நிரந்தமாக்கியது உடல் ! என் விடியல்கள் வேதனைகளின் வெளிச்சங்கள் ஆகின ! வரலாறுகளில் புகைப்படமாய் மாற்றிப் பூக்களைத் தூவினார்கள் நடைமுறைத் தோட்டத்தில் முட்களைத் தூவினார்கள். நான் சிலுவைகளை சுமந்தேன். குடும்பம் வேலை உறவுகள் என போராட்டமே […]Read More
ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து எழுதியது எப்படி வலித்திருக்குமோ உனக்கு என்னவெல்லாம் செய்திருப்பார்களோ உன்னை பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய் கொடூரர்களின் தொடுதலை நீ உணர்ந்திருக்கமாட்டாய் அவர்களை நீ அண்ணனென்றோ அங்கிளென்றோ மட்டும் தான் அழைத்திருக்க முடியும் தின்பண்டங்களோ சாக்லெட்டோ வாங்கித் தருவதாகக் கூறித் தான் அழைத்துப் போயிருப்பார்கள் உன் உடைகளை கழற்றும் போது கூட உன்னால் யூகித்திருக்க முடியாது குளித்து விட்டுப் போகலாமெனக் கூறியிருப்பார்கள் நீயும் நம்பித் தொலைத்திருப்பாய் உன் உறுப்புகளை தொடும் […]Read More
இது புகழ் பாட்டு புகழவேண்டிய பாட்டு கருப்பு நிலவன் தியாயகத்தை கவிதையில் சொல்லும் இது காதல் கலந்த புகழ் பாட்டு .. சமுத்திரத்தின் மேனியில் உறவாடி கலக்கும் முகில் போல என் பாட்டு கருப்பு நிலவனை புகழ்ந்து நிற்கும் … காதலியின் கரு காதல் அல்ல .. உண்மைக்கும் பொருத்தும் .. காமராஜர் என்ற கற்புக்கும் பொருத்தும் …… கருப்பு நிலவன் தும்பை வெள்ளை வேட்டி கட்டி வந்தால் தமிழ் நாடு எனும் காதலி வெட்கத்தில் சிவப்பாள்…. […]Read More
காதல் உணர்வு ஓன்றும் மேலோங்கவில்லை ! கண்னோடு கண் கொண்டோ சம்பவத்தின் சாயலோ, மின்னலாய் புகுந்து மின்மினிப் பூச்சி ஏதும் பறக்கவில்லை ! நண்பர்கள் மத்தியில் கதையளக்க அவளிடம் பரஸ்பரம் வேண்டினேன் ! அவள் புழவாய் காணும் கனம் என் வழிதல் புரிந்தது விபரிதம் வேண்டாம் விலக நினைத்தாலும் காதல் கதாநாயகன் கழுத்தை நெறிக்கின்றான் ! எப்படி அவளை கவர்வது ? எது சிந்தித்தாலும் புதுமை இல்லை ! சாணக்கியர் வழி தோன்றல்கள் மூலைக்கு மூலை முளைக்கின்றனர் […]Read More
தேடல்களில் காணாத தேவதை அவள் .. என் மாளிகையின் இளவரசி அவள் .. தத்தித் தாவும் குட்டி நிலவு அவள் .. அவள் கை மறைத்து எட்டிப்பார்க்கும் அழகில் ! என் இதயமும் இரண்டொரு நொடி நின்று துடிக்கும்.. பிஞ்சு கரங்கள் வருட என் தாடியும் தவம் கிடைக்கும் .. மழை மண் சேரும் மகிழ்வு அவளின் எச்சில் முத்தங்களில் … அத்தனை முறையும் கோமாளி ஆவேன் அவளின் கள்ளமில்லா சிரிப்பிற்காய்.. எங்கே அவளின் தங்க மேனி..? […]Read More
ஐந்தாவது நாளாய்த் தொடருது மழை! எங்கும் நீர்…எதிலும் நீர்… தூர் வாரிய குளங்களெல்லாம் நீர் நிறைந்து கிடக்குது… ஏர் பூட்டிய உழவர்களும் நீர் பரப்பிய வயல்களிலே… குழாயடியில் இல்லை குடங்களின் மாநாடு.. குருவிகளும் காக்கைகளும் அருவிகளில் குளிக்கிறது… தாங்கள் செய்த புண்ணியமே பூமி செழிப்பாயிருக்குதுன்னு கூடிப் பேசி களிக்குதுங்க ஊரிலுள்ள பெரிசுக எல்லாம்… அம்மாவுக்கும் சந்தோஷம்தான் அடுப்படியில பால் பொங்குது.. அங்கேயே நில்லம்மா என்னை வந்து எழுப்பிடாத… பால் வீணாப்போயிடும் என் கனவு பாழாப் போயிடும்….! –செந்தில்குமார் […]Read More
காதல் பிழைகள் சீண்டலும் சுகமும் கருத்தரித்த அந்த நாட்களை நினைத்து ….. சுவாசம் விடுகிறேன் காதல் வலிமையானது,காலம் முழுவதும் வாழ்வதால் …. நீயும் நானும் மோதி கொண்ட நாட்கள் அதிகம் … காதலில் மோதல்தான் பிள்ளையார் சுழி நிலத்தை மோதி விதை கருத்தரிப்பது போல உன் விழி பேச்சில் நடத்திய பொய் கோபம் நிலவுக்கு பூச்சாண்டி கட்டும் மின்னல் போல ரசிப்பதை மறைபபதுதான் பெண்மையா? விரல் கடித்து தலை கவிழ்ந்து நாணம் சொன்ன அந்த காலம் போல தான் இப்போதும் …. கைப் பேசியை பார்ப்பது போல நீ நாணத்தை சொல்லும் போது பெண்மை மாறவில்லை என்பதை காண்கிறேன் ….. உன் காதில் ஜொலிக்கும் சின்ன கம்மல் கூட&Read More
விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப் பூவும்மாபாப்பாவுக்கு வச்சுவுடுமாஆசஆசையாய்கீரையோடு ரோசாப்பூவையும்வைத்து விட்டுப்போகிறார்வெள்ளாயிப் பாட்டிநகரத்து மனிதர்களும்நட்பு பாராட்டுவார்கள்இவர்களின்நட்பு சூழ் உலகில்தான்ஒவ்வொரு நாளும் நகர்கிறதுஎனக்கு.Read More
கூந்தலை வடிகட்டிய பிறகும் இறங்க மறுத்து அடர்ந்திருந்தன அவள் தேகமேறிய ஒன்று. அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில் விலகிக் கொள்ள விருப்பம் இன்றி கூந்தலுக்குள் மறைந்திருந்து வேடிக்கை காட்டியது பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற மனமின்றி பள்ளிக்கூடம் செல்ல அழுது அடம்பிடிக்கும் மாணவனைப் போல் அடம் பிடித்தது இறுதியாக அவள் கூந்தல் எனும் தூக்குக் கயிறில் தற்கொலை செய்து கொள்ள தயாராகி கொண்டன அவள் உடல் ருசித்த நீர்த்துளிகள். —ஐரேனிபுரம் பால்ராசய்யாRead More
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று
- ஓவியர் கோபுலு
- ஓவியர் ரவி வர்மா
- பாவேந்தர் பாரதிதாசன்
- ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவு..!