காதல் புதுமைகள் – கஷ்மீர் ஜோசப்

தூண்டலால்
தீண்டபட்ட
உன்னழகின்
எழுச்சிதான்,
தூவலால்
தீட்டபட்ட
கவிதைகளாகின…

என்
எண்ணத் தேடலில்,
வந்து விழுந்த
ஒப்பனையற்ற
கவிதை நீ…

வருடிச் செல்லும் காற்றை
பிடித்து வைக்க ஆசை தான்.
என்னை வருடிச் சென்ற
காற்றை தான்,
நீயும் சுவாசித்து
வாழ்கிறாய்,
அதற்காகவே
உன்னிடம்
திசை
திருப்புகிறேன்…

இதயமென்னும்
உன்
கருவறையில்
கர்பம்
தரித்த
என் காதல்,
காரணமில்லாமல்,
கலைக்கப்பட்டது
ஏனோ???

பெண்மை
எனும்
புத்தகத்தை,
புரட்டிய
வேகத்தில்
கிழிந்த
உணர்வுகள்
ஆயிரம்.
மென்மையானவளை
மெதுவாக
படித்துப்
பாருங்கள்,
புதைந்திருக்கும்
புதுமைகள்
பல்லாயிரம்…

– கஷ்மீர் ஜோசப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!