நெஞ்சே எழு

 நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
கடைசி காலத்தைக் கற்கண்டைப் போல
சுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள்
இன்று எத்தனையோ !
கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்!
தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்
ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ
அடுத்தவர் சொல் கேட்டு 
அந்நியர்களாக்கி விட்டார்கள் அப்பெற்றவர்களே!
புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப் பஞ்சமோ இல்லை
அன்பிற்கும் அரவணைக்கும் மட்டும்தான் இங்குப் பஞ்சமே!
நெஞ்சே எழு 
பாலர்பள்ளிகளில் பம்பரவிளையாட்டுக்குப் பதிலாக
பண்புகளைக் கற்று கொடு நீர்
அப்போவது கல்நெஞ்சு கரையுமா
என்பதைக் காத்திருந்து பார்ப்போமா ?

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...