நிழல்!

 நிழல்!

நீண்ட இடைவெளிக்குப்பின்

அந்த புன்னை மரத்தை பார்த்தேன்…

மெல்லிய காற்றில் கைகுலுக்கியது..

முன்னைப் போல்

சுற்றியும் எதுவுமில்லை

நகர சூழலில்

எனது கணங்கள்

ரணங்களை மாறியிருந்தன…

எட்டாம் வகுப்பில்

கணக்கு படம் சொல்லி தந்த

தமிழ்ச் செல்வி நினைவுக்கு வந்தாள்

“எலே… யார்ரா அது இன்டெர்நஷனல் ஸ்கூலுக்குள்ள”

ஓ … இது -எனது கிராமம் தான்

பள்ளிதான் இல்லை..!

நிரம்ப மாறிவிட்டது

மாலை வெயிலில் –அந்த

மஞ்சள் இல்லை..!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...