Tags :ராசி அழகப்பன்

கவிதைகள்

சொல்வதைக் கேள் !

சொல்வதைக் கேள் ! இமைகளிலிருந்து இறங்கு இதயத்தில் அமர்ந்து நீண்ட நாள் இம்சித்தாய் .. என்னதான் வேண்டும் உனக்கு ? நிறைய சத்தியம் செய்தேன்.. அன்பை விதைத்தேன்.. இலகுவாய் வழக்கை இருக்குமென்றெண்ணி .. புரிந்துகொள்.. பசி போக்க ஓடவே பகல் பொழுது போதவில்லை.. சுய மரியாதையை வேறு பலரை உறுத்துகிறது .. இதில் எங்கே ? முதலில் நீ இமைகளிருந்து இறங்கு!Read More

கவிதைகள்

நிழல்!

நீண்ட இடைவெளிக்குப்பின் அந்த புன்னை மரத்தை பார்த்தேன்… மெல்லிய காற்றில் கைகுலுக்கியது.. முன்னைப் போல் சுற்றியும் எதுவுமில்லை நகர சூழலில் எனது கணங்கள் ரணங்களை மாறியிருந்தன… எட்டாம் வகுப்பில் கணக்கு படம் சொல்லி தந்த தமிழ்ச் செல்வி நினைவுக்கு வந்தாள் “எலே… யார்ரா அது இன்டெர்நஷனல் ஸ்கூலுக்குள்ள” ஓ … இது -எனது கிராமம் தான் பள்ளிதான் இல்லை..! நிரம்ப மாறிவிட்டது மாலை வெயிலில் –அந்த மஞ்சள் இல்லை..!Read More

கவிதைகள்

மகிழக் கற்றுக் கொள்

எப்போதும் இருட்டுக்குள் உறங்கும் ஒளியை உற்சாகமாய் எழுப்பு !  கடந்த காலம் எப்போதும் பழுத்த இலையின் பரிவட்டங்கள் தான். .. புதிதான இசைக்குள் பயணப்பட கைவசம் ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி! விழுந்த இடத்தில்  உனது எழுச்சியின் தடயம் ஒளிந்திருக்கும் .. சர்ச்சைகள் தான் தெளிவான சொற்களைச் சுட்டுத் தரும்.. நிறமாற்றங்கள் வானத்தின் வெளிப்படை ஆரோக்கியம்.. ஆண்டுகள் என்பது அவசரக் குறிப்பு அயராமல் கடந்து செல் விருப்பக் குறியாய்..!Read More