Tags :பயணங்கள் தொடர்வதில்லை

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

11.கவிகை வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன. தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப் போயிட்டிருக்கு?” என்று கேட்டாள். “பார்க்கலாம், இப்பதானே ஆரம்பிச்சிருக்கு” என்றாள் தன்யா. “இப்போ அடுத்து என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா. “ஒரு நூலைப் பிடிச்சுக்கிட்டு அது எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் போனா, சிக்கல் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

10. தீப்பெட்டி “கான் ஐ ஸ்மோக்?” என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான் ப்ரிஜேஷ். அவனருகில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த், அஜய் இருவரும் பயம் ஒருபுறம், ஆர்வம் ஒருபுறம் என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவித்தனர். ப்ரிஜேஷிடம் அத்தகைய தவிப்பு எதுவும் இல்லை. தன்யா, தர்மா, தர்ஷினி அவன் எதிரில் அமர்ந்திருந்தார்கள். மௌனமாக அவனையே பார்த்தார்கள். “வெல்?” என்று ப்ரிஜேஷே மறுபடி பேச்சைத் தொடக்கினான். “சின்ன ஏரியா இந்த டைனிங் கார். ஏர்-கண்டிஷண்ட் கோச். இங்கே ஸ்மோக் பண்றதுக்கு […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 9 | சாய்ரேணு

9. தாள்-பென்சில் அலையலையாய் அதிர்ச்சி தாக்க, அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்கள் தர்மாவும் தர்ஷினியும். “அந்த… ட்ராக்கில் கிடக்கறதாச் சொன்னது… சுப்பாமணியா?” விழிகள் விரியக் கேட்டாள் தர்ஷினி. “சு… சுப்பாமணி… எப்படி? நீங்க… உங்களுக்கு…” என்று தடுமாறினான் தர்மா. தன்யா “ஆப்வியஸ்” என்றாள் சோர்வான குரலில். “நாம நினைச்சது தப்பு. அவங்களை வந்து அழைச்சுப் போனது உண்மையான ரயில்வே அதிகாரி தான்” என்றாள். “ஹௌ கான் இட் பீ..? ஓங்கோல் ஸ்டேஷன்ல யாருக்குமே ஒரு அதிகாரி வந்ததோ, […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 8 | சாய்ரேணு

8. தூக்குக் கூஜா ப்ரிஜேஷும் அவர்களைப் பார்த்துவிட்டான். பார்த்தான் என்பதைவிட, அவனுடைய கண்கள் அவர்கள் மீது படிந்து விலகின என்று சொல்வதே நிஜம். அவனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. யாரையும் அடையாளம் தெரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவன் இல்லை. கையில் சிறிய பக்கெட் போல் ஏதோ இருந்தது. அதை மட்டும் இறுகப் பிடித்திருந்தான். தர்ஷினி அவனை விடுவதாக இல்லை. வேகமாக நடந்து அவனுக்கு நேரே சென்று நின்றுகொண்டாள். “ப்ரிஜேஷ்! இங்கே என்ன பண்றீங்க? எப்போ ட்ரெயின்லேர்ந்து இறங்கினீங்க? ஸ்ரீஜாவைப் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 7 | சாய்ரேணு

7. பாட்டரி விளக்கு “காணுமா? என்ன சொல்றீங்க?” என்று குழம்பிய தர்மா “முதல்ல உட்காருங்க. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்றான். “அதுக்கெல்லாம் நேரமில்லை சார். அவங்களைக் காணோம்! திடீர்னு விழிப்பு வந்தது. பார்த்தா… பர்த் எம்டியா இருக்கு! எங்கிட்ட சொல்லாம எங்கியும் போக மாட்டாங்க சார்! சரி, ரெஸ்ட் ரூம் போயிருக்காங்களோன்னு அங்கேயும் போய்த் தேடினேன். அங்கெல்லாம் இல்லை சார்…” ஷான் அழுதுவிடுவாள் போல் காணப்பட்டாள். கையில் பாட்ட்டரி விளக்கு வைத்திருந்தாள். “டென்ஷன் ஆகிக்காதீங்க! […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 6 | சாய்ரேணு

6. சோப்பு “ஹாட் சூப்ஸ் – டொமாட்டோ, வெஜிடபிள், மின்ஸ்ட்ரோன், அவகாடோ கார்ன். ஃப்ரெஷ் ஜூஸஸ் – ஆரஞ்ச், ஆப்பிள், வாட்டர்மெலன், பொமோக்ரானெட், க்ரேப்ஸ், லெமன்” என்று ஒப்பித்து முடித்த பேரர் “காஃபி?” என்ற கலிவரதனின் கேள்வியால் கோபப்பட்டிருப்பாரோ என்னவோ, வெளியே ஒன்றும் தெரியவில்லை. அதே மெஷின்தனமான குரலில் “யெஸ் சார், காஃபி, சாய், மசாலா சாய், மில்க், பாதாம் மில்க், பெப்பர் ஹல்தி மில்க், லெமன் மிண்ட் டீ” என்றார். “காஃபி” என்றார் கலிவரதன். பேரர் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

5. கூந்தல் எண்ணெய் அதே நாள். சில மணிநேரம் முன்பு. “ஏய் சாந்தினி! அசமந்தம்! இன்னைக்கு ராத்திரி ட்ரெயின் ஏறணும், சீக்கிரம் சாமானையெல்லாம் எடுத்துவைன்னு நாலு நாழியா கத்தறேன், நீ அசையவே இல்லை! கடைசில சாமானையெல்லாம் நானும் உன் அம்மாவுமே எடுத்து வெச்சுட்டோம். சரி, நீயாவது ரெடி ஆகிக்கக் கூடாதா? இன்னும் குளிக்கக்கூட இல்லை. வந்து உட்கார், எண்ணெய் தடவித் தலைவாரி விடறேன்…” பாட்டியின் அழைப்புக்குப் பதில் வராமல் போகவே “அந்த செல்போன்ல அப்படி என்னதான் இருக்கோ? […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

4. சிறுகத்தி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, கொட்டைப் பாக்கைச் சிறு கத்தியால் சீவி, சுண்ணாம்பு தடவப்பட்ட துளிர் வெற்றிலையில் அன்புடன் வைத்துக் கொண்டிருந்தார் சுப்பாமணி. வெளியே ஏதோ சப்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்வையைப் போட்டவர், அதிர்ந்தார். ப்ரிஜேஷின் சட்டை ஒரு பெண்ணின் கைகளில் கொத்தாக மாட்டியிருந்தது. (சட்டைக்குள் ப்ரிஜேஷ் இருந்தான்.) வெளியே பாய்ந்தார் சுப்பாமணி. கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே அதற்குள் கூடிவிட்ட சிறு கூட்டத்தைப் பிளந்துகொண்டு ப்ரிஜேஷ் அருகில் சென்றார். “என்ன… என்ன பிரச்சனை? எதுவாயிருந்தாலும் பேசித் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு

3   ஆடை “வணக்கம் மேம். நீங்க காலேஜ் புரொஃபஸர் இராணி கந்தசாமி தானே?” என்று கேட்டாள் அந்த இளம்பெண். பளீரென்ற தோற்றம். அழகான, பொருத்தமான ஆடை. இராணிக்கு அவளைக் கண்டதுமே பிடித்துப் போய்விட்டது. “வரும் ஆனா வராதுன்னு நீங்கள்ளாம் ஒரு ஜோக் சொல்வீங்களே, அந்த மாதிரி உன் கேள்விக்குப் பதில் – ஆமா ஆனா இல்லை!” என்றாள் இராணி கந்தசாமி புன்னகையுடன். அந்தப் பெண் விழித்தாள். “நான் காலேஜ் புரொபஸர்தான், ஆனா இப்போ ரிடையர் ஆகிட்டேன்” என்றாள் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 3 | சாய்ரேணு

2. கண்ணாடி ஆங்காங்கு கிழிந்து தைத்திருந்ததைப் போன்று ஜீன்ஸ். விலையுயர்ந்த டீ-ஷர்ட். முதுகில் திம்மென்று ஏறியிருந்த பேக்-பேக். கையில் அதக்கியிருந்த ஐஃபோன். ஒற்றைக் காதில் அணிந்திருந்த ப்ளூடூத். உச்ச டெஸிபலில் பேச்சு. கண்ணைவிட்டு அகலாத குளிர்கண்ணாடி. இளம்பெண்களை மட்டுமே கவனிக்கும் பார்வை. வெளிநாட்டு இறக்குமதிக் காரில் சென்னை சென்ட்ரலுக்கு வந்து இறங்கிய அந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்சொன்ன அடையாளங்கள் பொருந்தின. அவர்களில் நடுநாயகமாக வந்துகொண்டிருப்பவன் ப்ரிஜேஷ். ப்ரிஜேஷ்? சங்கரின் மகன். அவனோடு வரும் இருவரும் – அஜய், […]Read More