தமிழக எல்லையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா….

 தமிழக எல்லையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா….

   தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அம்மா பேரவை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72ஆம் பிறந்தநாள் விழாவுக்கு அம்மா பேரவை நிர்வாகி நாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் என்.எஸ்.ஆர்.நிஜாமுதின், ஊராட்சித் தலைவர் தனசேகர், பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் முல்லைவேந்தன் மற்றும் சேகர் முன்னிலை வகித்தனர்.

   நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி ஊரட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய செயலர் கோபால் நாயுடு, மாநில மீனவர் அணி துணைச் செயலர் ஜெ.சுரேஷ் பங்கேற்றனர்.

    தொடர்ந்து தமிழக எல்லையில் அதிமுக கட்சிக் கொடியை ஒன்றியச் செயலர் கோபால் நாயுடு ஏற்ற, ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ராமானுஜம், ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...