விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்….

 விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்….

 மருத்துவர்களின் லஞ்சம் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உண்மை தன்மை சான்றிதழ் வழங்கப்படும்.

   இந்த நிலையில், சான்றிதழ் வழங்குவதில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் லஞ்சம் பெறுவதைக் கண்டித்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில், திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...