காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்:

 காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்:

மு.க. ஸ்டாலின்…

  காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

   இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னை மாதிரி அனைவரும் பணியாற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. 

   காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? ஹைட்டேரா கார்பன் கிணறுகள் என்ன ஆனது. அதனை மூடிவிட்டீர்களா? காவிரி டெல்டா பகுதி குறித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற இரு அவைகளில் கேள்வி எழுப்பியும் மத்திய அமைச்சர் பதிலளிக்கவில்லை. 

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...