மீண்டும் மணல் கொள்ளை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரனாபுரத்தில் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கலிங்கபட்டி பகுதி 1 கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 30 பேர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்