சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில்

 சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில்

வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கி, தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார்.

 

சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.படத்தின் தொடக்கத்தில் இருந்து பெயர் வைக்கப்படாத நிலையில், பிஸ்கோத் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், தாரா அலிஷா பெரி, சுவாதி முப்பாலா என பல்வேறு பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேண்டசி காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...