16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..! தெலுங்கானாவில் அடுத்த அதிர்ச்சி…

 16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..! தெலுங்கானாவில் அடுத்த அதிர்ச்சி…


தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் காலனியில் இருக்கும் சக்ரபுரி அப்பார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று மாலை 4 மணி அளவில் அவருடைய மகளான 16 வயது சிறுமி சமையல் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 பேர் அந்தப் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.தங்கள் மகளை காணாமல் தேடிய பெற்றோர் அமீர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் செல்போன் சிக்னல் ஆதாரமாக அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அவர் இருப்பதை கண்டு பிடித்து மீட்டனர்.

பாலியல் பலாத்காரம் நடைபெற்றபோது தடுப்பதற்காக அந்தப்பெண் நடத்திய தீவிர போராட்டத்தில் அவர் காயமடைந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர், விசாரணையில் காரில் இருந்த 3 பேர் தன்னை கடத்திச் சென்று இந்த படுபாதக செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்று கூறினார் அந்த சிறுமி.இதையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் காரில் இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டது தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகி இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...