வசமாக சிக்கிய வேலம்மாள் குழுமம்..!

 வசமாக சிக்கிய வேலம்மாள் குழுமம்..!
மலைக்க வைக்கும் கணக்கில் வராத சொத்துக்கள்…

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றள்ளது. இதில், கணக்கில் வராத ரூ.400 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்களது கிளைகளை நிறுவி உள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகமாக டொனேஷன் வசூலித்தது, வரி ஏய்பு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, சென்னை, மதுரை உள்பட 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...