2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். குறிப்பாக 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அறிமுகம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்:
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!